Wednesday, June 29, 2011

இந்தியவகை ஆங்கில நாவல் தளமும்,மறுகாலனிய கட்டமைப்பும்


இந்திய ஆங்கில எழுத்தின் திருப்புமுனை எப்போது ஏற்பட்டது என்பதை சரியாக விமர்சகர்களால் கணிக்க முடியவில்லை. அது வாசகர்களால் ஏற்படுத்தப்பட்டது. முன்பு குமுதம் மாதிரி இதழ்களில் முன்னணி தமிழ் நடிகைகள் ஆங்கில ‘பல்ப்’ நாவல்களைக் கையில் வைத்து வாசிப்பது போல போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்ததை நினைவு கூர்ந்தால் புரியும். இந்திய ஆங்கில வாசிப்பு அப்படித்தான் இருந்தது (?) ஆனால் ஆங்கிலக் கல்வி மூலம் தனது சமூக அந்தஸ்த்தை தேடிவந்த ஒரு புதிய தலைமுறைக்கு நாவல் தீனி (!) போடுவது மிகவும் சவாலான ஒரு வேலையாக இருந்த சூழலில் புக்கர் பரிசு நாயகரான சல்மான் ருஷ்டியை வாசகர்கள் கண்டடைந்தார்கள். அவரது ‘சாத்தானின் கவிதைகள்’ நூலைக் கண்டு அரண்டுபோய் இந்திய விமர்சக ஜாம்பவான்கள் தலைசிறந்த அவரது நாவலான ‘மிட் நைட் சில்ரனையும்’ அதிகம் சிலாகிக்காமல் கொஞ்சம் எட்டவே இருந்தாலும்... சாதாரண வாசகர்கள் அவரை தீவிரமாக வாசித்தார்கள் என்பதே உண்மை.

வி.எஸ்.நேய்பாலின் ‘எ பெண்ட் ஆஃப் ரிவர்’ நாவலை வாசித்த போதும், விக்ரம் சேதின் ‘சூட்டபிள் பாய்’ (உலகிலேயே மிகப் பெரிய நாவல் எனும் அந்தஸ்த்தை டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’நாவலிடமிருந்து பறித்த முயற்சி இது) பல மாதங்கள் எப்படியாவது வாசித்து நாவலுக்குள் முட்டி மோதி உள்ளே போக முயற்சித்த போதும் அவர்கள் நமக்காக எழுதவில்லை என்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது. ஆனால் அருந்ததிராய் தனது நாவலான சின்ன விஷயங்களுக்கான கடவுளை விட தனது அரசியல் மூலம் விருவிருப்பானவராக நம்முன்தோன்றுவதால் அவரது எழுத்தை முந்திக்கொண்டு தினசரிகளில் வெளிவரும் அவரது பெரிய கண்களோடான புகை படங்கள் வந்து நம்முன் அணிவகுக்கின்றன. ஆனால் அவரது எழுத்துக்களை, அமிதா கோஷ், மற்றும் ஜம்பலஹரி போன்ற புதிய இந்திய ஆங்கில நாவல் வரிசையிலிருந்து தவிர்க்க முடியாத அழுத்தமான பதிவாக பலரும் முன் வைக்கிறார்கள்.

ஆனால் சமீபத்திய மூன்று இந்திய ஆங்கில (இண்டிலீஷ்) நாவல்கள் மிகச் சரியான கோணத்தில் அத்துறையை செலுத்துவதாக நான் பார்க்கிறேன். விக்காஸ் ஸ்வரூபின் ‘கியூ அண்ட் ஏ’ (Q&A), அரவிந்த் அடிகாவின் ‘தி வொய்ட் டைகர்’ (The White Tiger). மற்றும் தற்போது ‘தி ஹிந்து’ விருது பெற்றுள்ள மனுஜோசப்பின் ‘சீரியஸ் மென்’(Serious Men). இந்தியா, சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா போற்றியதைப் போல ஒரே இந்தியா அல்ல. முன்னால் குறிப்பிட்டவை எல்லாம் அந்த வெளியே வளர்ந்து உயர்ந்து நெஞ்சை நிமிர்த்தும் அந்த இந்தியாவைப் பற்றிய நாவல்கள் என்றால் இங்கே நான் குறிப்பிடும் மூன்றும், அப்படிப்பட்ட பெரிய நகரங்களின் பாதாள சாக்கடை களுக்கு ஒரமாக.. குப்பைமேடுகளின் பின்புறம் வாழும் ‘தி அதர் இந்தியா’ (the other india). தனது அன்றாட வாழ்வின், உயிர் வாழ்தலின், அடிப்படையைத் தேடி நொடிதோறும் வலிதாங்கும் அடித்தள மக்களின் அவலங்கள் இந்த மூன்று நாவல்களிலும் அணிவகுப்பதைப் பார்க்கிறோம்.

‘ஸ்லம் டாக் மில்லினர்’ படமாக உருவாக்கப்பட ‘கியூ அண்ட் ஏ’ நாவல் அதிகம் வாசிக்கப்படவில்லை. சினிமாவின் பிரபலம் நாவலை பாதிக்கவில்லை. ஆனால் நாவலை வாசித்து சினிமாவைப் பார்த்தவர்கள் படத்தினால் ஈர்க்கப்பட வாய்ப்பே இல்லை. பெரு நகரங்களில் ராஜ விசுவாசிகளுக்கும் அதிகார அரிதாரங் களுக்கும் அவர்களது வாழ்வை மேன்மையாக்கிட எப்படி சாதாரண மக்கள் தங்களது கொடிய அன்றாட வாழ்வைப் பலியிடுகிறார்கள் என்பதை ராம் முகமது தாமஸின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. கோடீஸ்வரன் டிவி நிகழ்ச்சியின் அனைத்துக் கேள்விகளுக்கும் அவன் சரியான பதில் அளித்து கோடியை ஒரே எபிசோடில் வென்று விடுகிறான். நாய் மாதிரி அவனை அடித்து போலீஸ் இழுத்துச் செல்கிறது. ‘எழுதப் படிக்க மட்டுமே தெரிந்த ஒரு குப்பத்து குப்பைக்கு வகைகள் எப்படித் தெரியும்... என்கிற சந்தேகம் என விரியும் நாவல், ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு அத்தியாயமாக, நமது ரத்தத்தை உரையவைத்து விடும். மும்பை வீதிக் குழந்தைகளின் வாழ்வை பதறப்பதற நம்முன் வைக்கிறது.

அனாதையாக கண்டெடுக்கப்படும் குழந்தைக்கு முதலில் தாமஸ் என்று பெயர் வைக்கும் பாதிரியார், இந்துக்களுக்கு பயந்து ராம் என்றும் இஸ்லாமியர்க்கு பயந்து முகமது என்றும் சேர்த்து அவனை ராம் முகமது தாமஸ் ஆக்குகிறார். நாவலின் அற்புதமான இந்த விஷயம், சினிமாவில் இல்லை, ஒரு வேளை வசூல் எஜமானர்களான ஆங்கில தயாரிப்பாளர்களுக்கு இது பெரிய விஷயமாகப் படவில்லை போலிருக்கிறது.

இந்தியா இன்று ‘வளர்ந்த’ நாடுதான் என சர்டிபிகேட், ஒபாமா கொடுத்து, ‘குட்குட்’ என பாராளுமன்றத்தில் பாராட்டுகிறார். நமது மென்பொருள் துறை இளைஞர்கள் ரொம்பவே குஷியாகி பார்டிகள் நடத்தி அந்த அவலத்தைக் கொண்டாடினார்கள் என்று படித்தேன். அரவிந்த் அடிகா மாதிரி இளைஞர்கள் அப்படி அல்ல. ‘தி வொய்ட் டைகர்’ வாசிப்பவர்கள், இந்தியாவின் மறுபக்கத்தைப் பற்றிய நெஞ்சை உறைய வைக்கும் பதிவுகளைப் பெறுவார்கள். இந்திய நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் ஒரு முறை இந்தியா சீனாவை விட சிறந்த நாடு... இங்கேதான் எண்ட புரூனர்ஸ் (தொழில் முனைவோர்) அதிகம் என்று குறிப்பிட்டார்.

இந்தியா வருகை தரும் சீன அதிபருக்குத் தன்னை வித்தியாசமான வெள்ளைப் புலியாக பாவிக்கும் முன்னா பலராம் ஒரு திறந்த கடிதம் எழுதுகிறான். முன்னா பலராம் ஒரு எண்டர் புரூனர். சீன அதிபருக்கு ஒரு தொழில் முனைவோனின் உருவாக்கம் பற்றிய விளக்கங்களோடு எழுதப்பட்ட ஒரு நக்கல், அரசியல் அங்கதம், என பலவாறான ரூபங்களை எடுத்து நாவல் நம்மை வீழ்த்துகிறது. பீகார் கிராமத்து, டெல்லி எருமை ஒன்றே நன்று கொண்ட பெரிய குடிசையில், பிறந்த முன்னா, வறுமையே வாழ்வாகி ஓட்டுனர் வேலை கற்று டீ கடை கரி உடைக்கும் குழந்தைத் தொழிலாளி எனும் வேலையிலிருந்து மீண்டு-ஊர் செல்வந்தனால் நகரம் பெயர்ந்து,,, பல விதமாய் பலரை ஏமாற்றி (கொலை கூட செய்து) பெங்களூரு மென் பொருள் பூங்கா யுவன் / யுவதிகளுக்கு இரவும் பகலும் வாகனங்கள் வாடகைக்கு விடுபவனாய் எப்படி உருவாகிறான் என்கிற வாழ்வோடு இணையும் நாம், உலகமயமாதலின் கொடிய பல் சக்கரம் இந்திய கிராமப்புற வாழ்வை சிதைக்கும் விக்ரம் சேத் அவலத்திலிருந்து ரத்தம் ஓடும் வீதிவழியேயும், தனது அன்றாட வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்படாது, வாழ முடிந்த புதிய மென்பொருள் உலகையும் ஒரே பைனாகுலரிலிருந்து பார்த்து தவிக்கிறோம். இந்த நாவலின் வெற்றியும், ஏமாற்றும், பகட்டும், லஞ்ச ஊழலும் மலிந்த இந்திய புது சமூகத்தின் உருவாக்கம் குறித்த அதன் பதிவில் மிளிர்கிறது.

ஆனால் மனுஜோசப் அதிலிருந்து சற்றே வேறுபடுகிறார். அம்பேத்கர் உட்பட நாட்டின் சமூகப் போராளிகள் அளித்த வாய்ப்பின் மூலம் நகரத்து அலுவலகங்களில் பலவிதமான அரசு வேலைகளில் தலித் மக்கள் அனுபவிக்கும், வெளியே சொல்ல முடியாத கொடுமைகளையும் அவற்றை எதிர்த்து அவர்கள் ஆடும் பகடைகளும் அய்யன் மணி பாத்திரம் மூலம் முன் வைக்கப்படுகிறது. அறிவியல் கல்விக் கூட இயக்குனரின் கிளார்க் அய்யன்மணி ஒரு தலித். இயக்குனர் அவரது அலுவலக எதிரியான இணை இயக்குனர் இருவருமே பார்ப்பனர்கள். ஆனால் மணியின் பார்வையில் தலித்துகளைக் தவிர மற்ற எல்லோருமே பார்ப்பனர்கள் (ஆங்கிலேயேர்கள், பார்ப்பனர்களின் பார்ப்பனர்கள்!).

மிகக் கொடிய வறுமை பிடுங்கும், BDD ஒரு அறை வீட்டில் (மும்பையில் குடிசைப் பகுதிகள் கண்ணில் படாமல் இருப்பதற்காக முன்பு பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய பல அடுக்குமாடி கட்டடங்கள் அவை) வாழும் அய்யன் மணி தனது மகன் ஆதியை ஒரு பெரிய குழந்தை ஜீனியசாக உலகிற்கு காட்ட பல வேலைகள் செய்கிறான்.. அறிவியல், பிரபஞ்ச அறிவு, தொழில் நுட்பம் என பெரிய அறிவார்ந்த, ஒளியுடன் வலம் வரும், அறிவியல் கல்வியாக, மாமேதைகள் சரியான பெண் பித்தர்களாவும், சாதாரண மக்களை விட பதவி பண வெறியர்களாகவும் இருப்பதைப் பார்க்கும் அய்யன்மணி, அலுவலத்தில் தாட் பார் த டே (நாளரு சிந்தனை) கற்பனையாக பார்ப்பனர்களை கிண்டலடித்து பலர் கூறியதாக எழுதி (ஐன்ஸ்டீன் உட்பட) அறிவியலில் புயல் கிளப்புவதிலிருந்து அதிகாரிகளின் பேச்சை செல்லில் பதிவு செய்து மிரட்டுவது வரை பல பகடைகள் செய்து தன் வாழ்வை, தக்கவைக்கும் அவலத்தை மிக அழகாகப் பதிவுசெய்கிறார் மனுஜோசப்.

மூன்று நாவல்களிலுமே தமிழர்கள் வருகிறார்கள். இன்று இந்தியா முழுவதும் தமிழர்கள் பற்றிய பேச்சு தவிர்க்க இயலாததாகி வருவதைத் தான் இது உணர்த்துகிறது. வெள்ளைப் புலி சொல்வான் ‘தெற்கே அரசியல் நடத்த இந்த மும்பை நகர அரசியல் தலைவர் களுக்கு பயம்... அங்கே தமிழர்கள் இருக்கிறார்கள் ... தே ஆர் லைக் நீக்ரோ’! இங்கே ‘சீரியஸ் மென்’ நாவலில் அய்யன்மணி ஒரு தமிழ் தலித். ரொம்பவும் தேவைப்படும் அவசியமான தருணங்களில் தமிழில் பேசி, தமிழ் அதிகாரிகளை அவர்களது மனைவியரை வழிக்கு கொண்டு வருவான். அவனது மனைவி தமிழ் சீரியல் பார்த்து மூக்கு உறிஞ்சுவதை வாசிக்கும் நமக்கு அடிவயிற்றைக் கலக்குகிறது. ஆபீசருக்கு காப்பி வாங்கிக் கொடுத்தபடி அவரது வாழ்வைத் தனது தரித்திரத்தோடு ஒப்பிட்டுப் பதறும் அவன் தான் இன்றைய அவலம்.

ஆர்.கே. நாராயண் போன்ற அந்த ஆங்கில ஆங்கிலேய எழுத்திடமிருந்து இண்டிலீஷ் உலகம் இன்று வெகுதூரம் வந்து விட்டது என்பது மட்டுமல்ல. அது அடித்தள மக்களை, முன் காட்டப்படும் ‘வளர்ந்த’ நெடிதுயர்ந்த இந்தியாவுக்குப் பின்னே அதை நிமிர்த்திப் பிடித்தபடி போராடும் இன்னொரு இந்தியாவைப் பதிவு செய்து வரும் சத்தம் போடாத புதிய திசை நோக்கி நடைபோடுவதையும் பார்க்கிறோம். இந்தப் புதிய மென்பொருள் சந்ததியினரிடையேயும் கனத்த இதயமும், சிறுமைகண்டு பொங்கும் தோள்களும் உள்ளன என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை.

சின்ன வயதில் வருடா வருடம் கோடை விடுமுறையில் ஒரு பத்து நாட்களாவது நாங்கள் லால்குடிக்கு எங்கள் தாத்தா வீட்டிற்கு ‘நாடு’கடத்தப்பட்டோம். அங்கே தெருப்புழுதியை அங்குலம் அங்குலமாய் அளந்து வெயிலை வீணாக்காமல் அலைந்த நேரம் போக வீட்டில் ஆர்.கே. நாராயண் புத்தகங்கள் சில வாசிக்க கிடைத்தன. அவரது கற்பனை ஊரான மால்குடி (அது லால்குடி மாதிரியே உச்சரிப்பு ஆனதால்) என்னைக் கவர்ந்தது... ஆனால் மிஸ்டர் சம்பத், மகாத்மாவுக்காக காத்திருத்தல் (waiting for the Mahathma) போன்றவை ஏற்படுத்திய ஆர்வம்... பள்ளிக்கூடத்தில் பாடமாக வைத்ததாலோ என்னவோ அவரது கைடு எனும் பலரும் பாராட்டும் நாவலில் எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை.

பின் நாட்களில் எனக்குள் புகுந்த சார்லஸ் டிக்கின்சும், மார்க்ட்வைனும் ஆர்.கே. நாராயண் என்கிற (ஒரே) இண்டிலீஷ் நாவலாசிரியர் மீதான என் ஈர்ப்பை அநியாயத்திற்கு உடைத்தெறிந்தார்கள். இங்கிலாந்திற்கு பிரயாணம் செய்த முதல் இந்தியர் ராஜாராம் மோகன்ராய், முதன் முதலில் இந்தியாவைப் பற்றி ஆங்கில புத்தகம் எழுதியவர் நிராஜ் சவுத்ரி... என்கிற ரீதியில் ‘முதன்முதல்’ தகவல் ஒரு இருநூறு வைத்திருக்கிறேன்.. (யாருக்காவது உபயோகப்படுமானால் பாரதி புத்தகாலயம் எண்ணிற்கு ஸ்பேஸ் விடாமல்(!) ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பவும்!) ஆனால் சமீபத்தில் ‘தி இந்து’ நாளிதழ் தனது முதல் இலக்கிய விருதை வழங்கி உள்ளது. பெற்றுள்ளவர் மனுஜோசப். அந்த இண்டிலீஷ் நாவல் ‘த சீரியஸ் மென்’ என்பதை கேள்விப்பட்டு அதனை வாங்கி வாசிப்பவர்கள் இந்திய ஆங்கில எழுத்து என்பது ஆர். கே. நாராயண் மட்டுமல்ல முல்க்ராஜ் ஆனந்த் (தீண்டத்தகாதவர்கள்) போன்றவர்களிடமிருந்தே கூட எவ்வளவோ மாறிவிட்டது என்பதை உணர முடியும்.

இந்திய ஆங்கில எழுத்தின் திருப்புமுனை எப்போது ஏற்பட்டது என்பதை சரியாக விமர்சகர்களால் கணிக்க முடியவில்லை. அது வாசகர்களால் ஏற்படுத்தப்பட்டது. முன்பு குமுதம் மாதிரி இதழ்களில் முன்னணி தமிழ் நடிகைகள் ஆங்கில ‘பல்ப்’ நாவல்களைக் கையில் வைத்து வாசிப்பது போல போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்ததை நினைவு கூர்ந்தால் புரியும். இந்திய ஆங்கில வாசிப்பு அப்படித்தான் இருந்தது (?) ஆனால் ஆங்கிலக் கல்வி மூலம் தனது சமூக அந்தஸ்த்தை தேடிவந்த ஒரு புதிய தலைமுறைக்கு நாவல் தீனி (!) போடுவது மிகவும் சவாலான ஒரு வேலையாக இருந்த சூழலில் புக்கர் பரிசு நாயகரான சல்மான் ருஷ்டியை வாசகர்கள் கண்டடைந்தார்கள். அவரது ‘சாத்தானின் கவிதைகள்’ நூலைக் கண்டு அரண்டுபோய் இந்திய விமர்சக ஜாம்பவான்கள் தலைசிறந்த அவரது நாவலான ‘மிட் நைட் சில்ரனையும்’ அதிகம் சிலாகிக்காமல் கொஞ்சம் எட்டவே இருந்தாலும்... சாதாரண வாசகர்கள் அவரை தீவிரமாக வாசித்தார்கள் என்பதே உண்மை.

வி.எஸ்.நேய்பாலின் ‘எ பெண்ட் ஆஃப் ரிவர்’ நாவலை வாசித்த போதும், விக்ரம் சேதின் ‘சூட்டபிள் பாய்’ (உலகிலேயே மிகப் பெரிய நாவல் எனும் அந்தஸ்த்தை டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’நாவலிடமிருந்து பறித்த முயற்சி இது) பல மாதங்கள் எப்படியாவது வாசித்து நாவலுக்குள் முட்டி மோதி உள்ளே போக முயற்சித்த போதும் அவர்கள் நமக்காக எழுதவில்லை என்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது. ஆனால் அருந்ததிராய் தனது நாவலான சின்ன விஷயங்களுக்கான கடவுளை விட தனது அரசியல் மூலம் விருவிருப்பானவராக நம்முன்தோன்றுவதால் அவரது எழுத்தை முந்திக்கொண்டு தினசரிகளில் வெளிவரும் அவரது பெரிய கண்களோடான புகை படங்கள் வந்து நம்முன் அணிவகுக்கின்றன. ஆனால் அவரது எழுத்துக்களை, அமிதா கோஷ், மற்றும் ஜம்பலஹரி போன்ற புதிய இந்திய ஆங்கில நாவல் வரிசையிலிருந்து தவிர்க்க முடியாத அழுத்தமான பதிவாக பலரும் முன் வைக்கிறார்கள்.

ஆனால் சமீபத்திய மூன்று இந்திய ஆங்கில (இண்டிலீஷ்) நாவல்கள் மிகச் சரியான கோணத்தில் அத்துறையை செலுத்துவதாக நான் பார்க்கிறேன். விக்காஸ் ஸ்வரூபின் ‘கியூ அண்ட் ஏ’ (Q&A), அரவிந்த் அடிகாவின் ‘தி வொய்ட் டைகர்’ (The White Tiger). மற்றும் தற்போது ‘தி ஹிந்து’ விருது பெற்றுள்ள மனுஜோசப்பின் ‘சீரியஸ் மென்’(Serious Men). இந்தியா, சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா போற்றியதைப் போல ஒரே இந்தியா அல்ல. முன்னால் குறிப்பிட்டவை எல்லாம் அந்த வெளியே வளர்ந்து உயர்ந்து நெஞ்சை நிமிர்த்தும் அந்த இந்தியாவைப் பற்றிய நாவல்கள் என்றால் இங்கே நான் குறிப்பிடும் மூன்றும், அப்படிப்பட்ட பெரிய நகரங்களின் பாதாள சாக்கடை களுக்கு ஒரமாக.. குப்பைமேடுகளின் பின்புறம் வாழும் ‘தி அதர் இந்தியா’ (the other india). தனது அன்றாட வாழ்வின், உயிர் வாழ்தலின், அடிப்படையைத் தேடி நொடிதோறும் வலிதாங்கும் அடித்தள மக்களின் அவலங்கள் இந்த மூன்று நாவல்களிலும் அணிவகுப்பதைப் பார்க்கிறோம்.

‘ஸ்லம் டாக் மில்லினர்’ படமாக உருவாக்கப்பட ‘கியூ அண்ட் ஏ’ நாவல் அதிகம் வாசிக்கப்படவில்லை. சினிமாவின் பிரபலம் நாவலை பாதிக்கவில்லை. ஆனால் நாவலை வாசித்து சினிமாவைப் பார்த்தவர்கள் படத்தினால் ஈர்க்கப்பட வாய்ப்பே இல்லை. பெரு நகரங்களில் ராஜ விசுவாசிகளுக்கும் அதிகார அரிதாரங் களுக்கும் அவர்களது வாழ்வை மேன்மையாக்கிட எப்படி சாதாரண மக்கள் தங்களது கொடிய அன்றாட வாழ்வைப் பலியிடுகிறார்கள் என்பதை ராம் முகமது தாமஸின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. கோடீஸ்வரன் டிவி நிகழ்ச்சியின் அனைத்துக் கேள்விகளுக்கும் அவன் சரியான பதில் அளித்து கோடியை ஒரே எபிசோடில் வென்று விடுகிறான். நாய் மாதிரி அவனை அடித்து போலீஸ் இழுத்துச் செல்கிறது. ‘எழுதப் படிக்க மட்டுமே தெரிந்த ஒரு குப்பத்து குப்பைக்கு வகைகள் எப்படித் தெரியும்... என்கிற சந்தேகம் என விரியும் நாவல், ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு அத்தியாயமாக, நமது ரத்தத்தை உரையவைத்து விடும். மும்பை வீதிக் குழந்தைகளின் வாழ்வை பதறப்பதற நம்முன் வைக்கிறது.

அனாதையாக கண்டெடுக்கப்படும் குழந்தைக்கு முதலில் தாமஸ் என்று பெயர் வைக்கும் பாதிரியார், இந்துக்களுக்கு பயந்து ராம் என்றும் இஸ்லாமியர்க்கு பயந்து முகமது என்றும் சேர்த்து அவனை ராம் முகமது தாமஸ் ஆக்குகிறார். நாவலின் அற்புதமான இந்த விஷயம், சினிமாவில் இல்லை, ஒரு வேளை வசூல் எஜமானர்களான ஆங்கில தயாரிப்பாளர்களுக்கு இது பெரிய விஷயமாகப் படவில்லை போலிருக்கிறது.

இந்தியா இன்று ‘வளர்ந்த’ நாடுதான் என சர்டிபிகேட், ஒபாமா கொடுத்து, ‘குட்குட்’ என பாராளுமன்றத்தில் பாராட்டுகிறார். நமது மென்பொருள் துறை இளைஞர்கள் ரொம்பவே குஷியாகி பார்டிகள் நடத்தி அந்த அவலத்தைக் கொண்டாடினார்கள் என்று படித்தேன். அரவிந்த் அடிகா மாதிரி இளைஞர்கள் அப்படி அல்ல. ‘தி வொய்ட் டைகர்’ வாசிப்பவர்கள், இந்தியாவின் மறுபக்கத்தைப் பற்றிய நெஞ்சை உறைய வைக்கும் பதிவுகளைப் பெறுவார்கள். இந்திய நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் ஒரு முறை இந்தியா சீனாவை விட சிறந்த நாடு... இங்கேதான் எண்ட புரூனர்ஸ் (தொழில் முனைவோர்) அதிகம் என்று குறிப்பிட்டார்.

இந்தியா வருகை தரும் சீன அதிபருக்குத் தன்னை வித்தியாசமான வெள்ளைப் புலியாக பாவிக்கும் முன்னா பலராம் ஒரு திறந்த கடிதம் எழுதுகிறான். முன்னா பலராம் ஒரு எண்டர் புரூனர். சீன அதிபருக்கு ஒரு தொழில் முனைவோனின் உருவாக்கம் பற்றிய விளக்கங்களோடு எழுதப்பட்ட ஒரு நக்கல், அரசியல் அங்கதம், என பலவாறான ரூபங்களை எடுத்து நாவல் நம்மை வீழ்த்துகிறது. பீகார் கிராமத்து, டெல்லி எருமை ஒன்றே நன்று கொண்ட பெரிய குடிசையில், பிறந்த முன்னா, வறுமையே வாழ்வாகி ஓட்டுனர் வேலை கற்று டீ கடை கரி உடைக்கும் குழந்தைத் தொழிலாளி எனும் வேலையிலிருந்து மீண்டு-ஊர் செல்வந்தனால் நகரம் பெயர்ந்து,,, பல விதமாய் பலரை ஏமாற்றி (கொலை கூட செய்து) பெங்களூரு மென் பொருள் பூங்கா யுவன் / யுவதிகளுக்கு இரவும் பகலும் வாகனங்கள் வாடகைக்கு விடுபவனாய் எப்படி உருவாகிறான் என்கிற வாழ்வோடு இணையும் நாம், உலகமயமாதலின் கொடிய பல் சக்கரம் இந்திய கிராமப்புற வாழ்வை சிதைக்கும் விக்ரம் சேத் அவலத்திலிருந்து ரத்தம் ஓடும் வீதிவழியேயும், தனது அன்றாட வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்படாது, வாழ முடிந்த புதிய மென்பொருள் உலகையும் ஒரே பைனாகுலரிலிருந்து பார்த்து தவிக்கிறோம். இந்த நாவலின் வெற்றியும், ஏமாற்றும், பகட்டும், லஞ்ச ஊழலும் மலிந்த இந்திய புது சமூகத்தின் உருவாக்கம் குறித்த அதன் பதிவில் மிளிர்கிறது.

ஆனால் மனுஜோசப் அதிலிருந்து சற்றே வேறுபடுகிறார். அம்பேத்கர் உட்பட நாட்டின் சமூகப் போராளிகள் அளித்த வாய்ப்பின் மூலம் நகரத்து அலுவலகங்களில் பலவிதமான அரசு வேலைகளில் தலித் மக்கள் அனுபவிக்கும், வெளியே சொல்ல முடியாத கொடுமைகளையும் அவற்றை எதிர்த்து அவர்கள் ஆடும் பகடைகளும் அய்யன் மணி பாத்திரம் மூலம் முன் வைக்கப்படுகிறது. அறிவியல் கல்விக் கூட இயக்குனரின் கிளார்க் அய்யன்மணி ஒரு தலித். இயக்குனர் அவரது அலுவலக எதிரியான இணை இயக்குனர் இருவருமே பார்ப்பனர்கள். ஆனால் மணியின் பார்வையில் தலித்துகளைக் தவிர மற்ற எல்லோருமே பார்ப்பனர்கள் (ஆங்கிலேயேர்கள், பார்ப்பனர்களின் பார்ப்பனர்கள்!).

மிகக் கொடிய வறுமை பிடுங்கும், BDD ஒரு அறை வீட்டில் (மும்பையில் குடிசைப் பகுதிகள் கண்ணில் படாமல் இருப்பதற்காக முன்பு பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய பல அடுக்குமாடி கட்டடங்கள் அவை) வாழும் அய்யன் மணி தனது மகன் ஆதியை ஒரு பெரிய குழந்தை ஜீனியசாக உலகிற்கு காட்ட பல வேலைகள் செய்கிறான்.. அறிவியல், பிரபஞ்ச அறிவு, தொழில் நுட்பம் என பெரிய அறிவார்ந்த, ஒளியுடன் வலம் வரும், அறிவியல் கல்வியாக, மாமேதைகள் சரியான பெண் பித்தர்களாவும், சாதாரண மக்களை விட பதவி பண வெறியர்களாகவும் இருப்பதைப் பார்க்கும் அய்யன்மணி, அலுவலத்தில் தாட் பார் த டே (நாளரு சிந்தனை) கற்பனையாக பார்ப்பனர்களை கிண்டலடித்து பலர் கூறியதாக எழுதி (ஐன்ஸ்டீன் உட்பட) அறிவியலில் புயல் கிளப்புவதிலிருந்து அதிகாரிகளின் பேச்சை செல்லில் பதிவு செய்து மிரட்டுவது வரை பல பகடைகள் செய்து தன் வாழ்வை, தக்கவைக்கும் அவலத்தை மிக அழகாகப் பதிவுசெய்கிறார் மனுஜோசப்.

மூன்று நாவல்களிலுமே தமிழர்கள் வருகிறார்கள். இன்று இந்தியா முழுவதும் தமிழர்கள் பற்றிய பேச்சு தவிர்க்க இயலாததாகி வருவதைத் தான் இது உணர்த்துகிறது. வெள்ளைப் புலி சொல்வான் ‘தெற்கே அரசியல் நடத்த இந்த மும்பை நகர அரசியல் தலைவர் களுக்கு பயம்... அங்கே தமிழர்கள் இருக்கிறார்கள் ... தே ஆர் லைக் நீக்ரோ’! இங்கே ‘சீரியஸ் மென்’ நாவலில் அய்யன்மணி ஒரு தமிழ் தலித். ரொம்பவும் தேவைப்படும் அவசியமான தருணங்களில் தமிழில் பேசி, தமிழ் அதிகாரிகளை அவர்களது மனைவியரை வழிக்கு கொண்டு வருவான். அவனது மனைவி தமிழ் சீரியல் பார்த்து மூக்கு உறிஞ்சுவதை வாசிக்கும் நமக்கு அடிவயிற்றைக் கலக்குகிறது. ஆபீசருக்கு காப்பி வாங்கிக் கொடுத்தபடி அவரது வாழ்வைத் தனது தரித்திரத்தோடு ஒப்பிட்டுப் பதறும் அவன் தான் இன்றைய அவலம்.

ஆர்.கே. நாராயண் போன்ற அந்த ஆங்கில ஆங்கிலேய எழுத்திடமிருந்து இண்டிலீஷ் உலகம் இன்று வெகுதூரம் வந்து விட்டது என்பது மட்டுமல்ல. அது அடித்தள மக்களை, முன் காட்டப்படும் ‘வளர்ந்த’ நெடிதுயர்ந்த இந்தியாவுக்குப் பின்னே அதை நிமிர்த்திப் பிடித்தபடி போராடும் இன்னொரு இந்தியாவைப் பதிவு செய்து வரும் சத்தம் போடாத புதிய திசை நோக்கி நடைபோடுவதையும் பார்க்கிறோம்.
தெற்காசிய நாவல்களில் இந்தியா அல்லாத தெற்காசிய நாடுகளில் இருந்து வந்த நாவல்கள் 250 நாவல்களையும் கூடத் தாண்டது. பிற 1250 நாவல்களும் இந்தியாவை மையமாகக் கொண்ட ஆங்கில நாவல்களாகத்தான் இருக்கிறது. இந்த நாவல்களிலும் 1000 நாவல்கள் இந்தியர்களால் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகவும், 250 நாவல்கள் இந்தியாவின் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களாகவும் இருக்கிறது.

இந்தியர்களால் நேரடியிலாக எழுதப்பட்ட நாவல்களிலும் இரு போக்குகள் உண்டு. மேற்கிலும் அமெரிக்காவிலும் வாழும் இந்தியர்களால் எழுதப்படும் நாவல்கள் ஒருவகை. இந்தியாவில் வாழும் உள்ளூர் எழுத்தாளர்களால் எழுதப்படும் நாவல்கள் பிறிதொரு வகை. முன் வகைக்கு ஸல்மான் ருஸ்டியையும் பின்னதற்கு பங்கஜ் மிஸ்ராவையும் குறிப்பிடலாம். இந்தியாவிலிருந்து ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்பட்ட நாவல்களிலும் இருவகையான போக்குகளை நாம் அவதானிக்கலாம். மேற்கத்திய பாத்திரங்களைப் பகுதியாகவும் இந்தியப் பாத்திரங்களைப் பகுதியாகவும் கொண்ட நாவல்கள் ஒரு வகை என்றால், முழுக்க முழுக்க இந்தியப் பாத்திரங்களையே கொண்ட நாவல்கள் பிறிதொரு வகையாக இருக்கும். முதல் வகைக்கு பங்கஜ் மிஸ்ராவின் ‘ரொமான்டிக்ஸ்’ நாவலையும், இரண்டாம் வகைக்கு (ஆர்.கே.நாராணன் மற்றும் ராஜாராவ் வழியிலான) அருந்ததி ராயின் ‘காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்’ நாவலையும் நாம் குறிப்பிடலாம்.

தெற்காசிய இலக்கியம் மேற்கில் கொடி கட்டிப் பறப்பதற்கான இரண்டு இலக்கியக் காரணங்கள் உண்டு. ஒன்று நமது நாடுகளில் பிரச்சினைகள் என்பது குவிந்து கிடக்கிறது. மேற்கில் ஒரு படைப்பு வெற்றிடமும் ஆன்மீக வெற்றிடமும் உருவாகியிருக்கிறது. பௌத்த நெறி இந்துத்துவம் போன்றவை குறித்த ஆய்வில் மேற்கத்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளைத் தான் பெரும்பாலுமான ஆங்கிலத்தில் எழுதும் தெற்கு ஆசிய எழுத்தாளர்கள் கையாள்கிறார்கள். ஜாதியம், வறுமை, பாலுறவு, காமசூத்ரா, இனப்பிரச்சினை, மத வன்முறை, அடிப்படைவாதம் போன்றவற்றை இவர்களுடைய நாவல்கள் பேசுகின்றன. இரண்டாவதாக மேற்கத்தியர்களின் அனுபவத்துக்கு மாற்றாக புதிதான அனுபவத்தை கற்றுக் கொண்ட செய்நேர்த்தியுடன் தெற்காசிய எழுத்தாளர்கள் முன்வைக்கிறார்கள். ஒரே சமயத்தில் மேற்கத்தியன் அதே சமயம் மேற்குக்கு அன்னியன் எனும் புலம்பெயர் அனுபவத்தையும் இவர்கள் படைப்புகளில் முன் வைக்கிறபோது, பிற புலம் பெயர் மக்களான ஆப்ரிக்க மத்தியகிழக்கு இலத்தீனமெரிக்கர்களும் இவர்களது எழுத்தில் தமது முகங்களைக் காண்கிறார்கள். இப்படியெல்லாம் ஆசிய ஆங்கில எழுத்தாளர்கள் தான் இன்று உலக அளவில் வெற்றிகரமான வணிகரீதியிலும் வெற்றிகரமான எழுத்தாளர்களாக இருக்கிறார்கள்.
இந்தியா குறித்த மூன்று நாவல்களை தென்னிந்தியரான அருந்ததி ராயும் (God of Small Things), வட இந்தியரான பங்கஜ் மிஸ்ராவும் (Romantics) இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பகுதியாக வாழும் அரவிந்த் அடிகாவும் (The White Tiger) எழுதியிருக்கிறார்கள. இலங்கை குறித்த இரண்டு நாவல்களை கனடாவில் வாழும் மைக்கேல் ஒண்டாஜியும் ( Anil’s Ghost) இங்கிலாந்தில் வாழும் அ.சிவானந்தனும் (When Memory Dies) எழுதியிருக்கிறார்கள்(1).

இந்திய நாவல்களில் அருந்ததி ராயின் நாவல் முழுக்க முழுக்க இந்திய வாழ்வையும் இந்தியப் பாத்திரங்களையும் கொண்டு உருவான நாவல். எழுபதுகளின் கேரள சமூகம், கேரள கம்யூனிசம், கம்யூனிஸ்ட்டுகளிடம் நிலவிய சாதியம் மற்றும் இந்து வைதீக மனம், நக்ஸலிசம், பார்ப்பனிய மதிப்பீடுகளால் உள்வாங்கப்பட்ட சிரியன் கிறிஸ்தவ சமூகத்தின் தீண்டாமை, பெண் வெறுப்பு போன்றவற்றைப் பேசும் நாவல் இது. விவாகரத்தான பெண்ணின் வாழ்வையும், பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாகும் குழந்தைகள் பற்றியும் பேசிய நாவல் இது.

பங்கஜ் மிஸ்ராவின் நாவல் இந்தியாவின் ஆன்மீகத் தலங்களான காசி, புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம், வடகிழக்கு புத்த தலங்கள் போன்ற நகரங்களில் நடக்கும் கதை ஆயினும், இதனது பாத்திரங்களில் பகுதிமனிதர்கள் மேற்கத்தியர்-பிரெஞ்சு தேசத்து மற்றும் இங்கிலாந்துப் பெண்கள். இந்து மதத்திலும் இந்திய சாஸ்த்ரீய இசையிலும் ஆன்மீகத் தேட்டத்தை நாடி இந்தியா வந்தவர்கள். பிறபகுதிப் பாத்திரங்கள் பார்ப்பனக் கலாச்சாரம், சாதியம், இந்துத்துவம், வன்முறை அரசியல் போன்றவற்றின் இடையில் இயங்க நேர்ந்தவர்கள். மேற்கத்திய இலக்கியத்திலும் பொருளியல் கண்ணோட்டத்திலும்; மீட்சியைத் தேடுகிறவர்களாக இந்தியர்கள் இருக்கிறார்கள். வேறு வேறு கலாச்சாரங்களில் தமது மீட்சியைத் தேடி இறுதியில் தத்தமது கலாச்சாரங்களுக்குள் சென்று சேரும் மனோரதியர்கள் பற்றிய கதை இது. இந்திய அணுக்கும் மேலைத்தேயப் பெண்ணுக்கும் இடையிலான உடலுறவு சம்பவங்களைக் கொண்டது பங்கஜ் மிஸ்ராவின் நாவல்.

நாவல் கலாச்சாரத்தின் பகுதியாக உலகத் திரைப்பட வெளியிலும் நடந்திருக்கும் சில மாற்றங்களையும் நாம் அவதானிக்க வேண்டி இருக்கிறது. இந்திய மும்பை மைய படங்களில் மட்டுமல்ல, பிராந்திய மொழிப் படங்களிலும் மேற்குல அமெரிக்கப் பாத்திரங்கள் தற்போது இடம்பெறுகிறார்கள். இந்தியப் படங்களும் முழுக்க முழுக்க அமெரிக்காவிவும் மேற்கிலும் எடுக்கப்படும் படங்களும் அதிகரித்து வருகிறது. இந்தியாவை முன்வைத்து மேற்கத்தியர்களும் படமெடுத்து வருகிறார்கள். அமெரிக்க இந்தியரான மீரா நாயரின் ‘மான்சூன் வெட்டிங்’, கேரள இயக்குனரான சந்தோஷ் சிவனின் ‘பிபோர் த ரெயின்’, ஹாலிவுட் இயக்குனரான டோனி போயிலின் ‘ஸ்லம் டாக் மில்லியனேர்’ போன்ற நேரடியிலான ஆங்கிலப் படங்களை இப்படியான படைப்பு முயற்சிகளாகக் கொள்ளலாம். இதே அளவில் இலங்கைப் பிரச்சினையை முன்வைத்து கேரள இயக்குனரான ராஜேஷ் தொடுபுழாவின் இயக்கத்தில் இங்கிலாந்தில் வாழும் இலங்கை-இந்தியர்கள் ‘இன் த நேம் ஆப் புத்தா எனப் படமெடுத்தார்கள். கனடியர்கள் இலங்கைப் பிரச்சினையை வைத்து ‘வெல்கம் டு கனடா‘, ‘நோ மோர் டியர்ஸ் சிஸ்டர்’ எனப் படமெடுத்தார்கள். நார்வேஜியர்கள் ‘மை டாட்டர், டெரரிஸ்ட்’ எனப் படமெடுத்தார்கள்.

கனடாவில் வாழும் இலங்கையரான நாவலாசிரியர் மைக்கேல் ஒன்டாஜி அடிப்படையில் அரசியலில் இருந்து விஷயங்களைத் தொடங்குவது இல்லை. நடைமுறை அரசியல் சம்பந்தமான அவருடைய வெறுப்பை அவர் பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார். அவர் நம்முடைய காலத்தில் மனிதனுக்கு நேர்கிற சில அடிப்படையான மானுட அவலங்களில் இருந்துதான் பிரச்சினையைத் தொடங்குகிறார். உலகப் போர்கள் உள்நாட்டுப் போர்களினால் மடடுமல்ல இப்போது பொருளியல் காரணங்களால் கூட இடப் பெயர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்த இடப்பெயர்வினால் மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பே மேற்குக்கு வந்தவனுக்கு தன்னுடைய சொந்தத் தாய் நாட்டுக்கான கடமை அல்லது பொறுப்பு என்பதுதான் என்ன? அவனுடைய மதிப்பீடுகள் தனது சொந்த தேசம் சார்ந்த தேசபக்த மதிப்பிடுகளா? அல்லது தனது புதிய வாழ்நிலை அனுபவங்கள் சார்ந்து தனது சொந்த தேசத்துக்கு துரோகம் செய்கிற மதிப்பீடுகளா? இப்படி நிறைய மனிதர்கள் நம் காலத்தில உருவாகிவிட்டார்கள். ஒன்டாஜியும் அவர்களில் ஒருத்தர்தான். நம் காலத்திலிருக்கிற இந்த அறவியல் பிரச்சினையை ஜே.வி.பி பிரச்சினையின் கால கட்டத்தை எடுத்துக் கொண்டு ‘அனில்ஸ் கோஸ்ட்’ நாவலில் சித்திரிக்க அவர் முயல்கிறார்

அரசியல் அடிப்படையில் ஆன்மீக அளவில் புத்த மதத்துக்கு அனுசரனையான பார்வை அமெரிக்காவிலும் மேற்கிலும் இருக்கிறது. இந்த வகையில் பிராட் பிட் நடித்து ‘செவன் டேஸ் இன் திபெத்’ படம் வருகிறது. ‘குன்டன்’ படம் வருகிறது. பிராட்பிட், ஹரிசன் போர்ட், ரிச்சர்ட் கீர், மார்ட்டின் ஸ்கோர்சிஸே போன்ற பெரிய ஹாலிவுட் பட்டாளம் புத்தமதம் பின்னாடி இருக்கிற இன்றைய சூழலில், இந்தப் பௌத்தம் சம்பந்தமான சித்தரிப்பு புத்தக வியாபாரத்துக்கு இங்கு பயன்படக் கூடிய விஷயம் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை.

எந்த மதமும் போலவே புத்த மதமும் பாசிசத்துக்குத் துனை போகும் என்கிற விஷயத்தைச் சொல்லத்தான் இன்று கலைஞர்கள் தேவை. வாசகர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் புத்தமதம் பற்றி பெருமிதமாகப் பேசுவது என்பது தற்போது ஐரோப்பியர்களினுடைய மனத்தளத்திற்குப் போவதற்கு உடனடியான நுழைவுச் சீட்டு ஆகவும் அது இருக்கிறது. ஓன்டாஜியின் நாவலிலும் இலங்கை மற்றும் அமெரிக்க கதாபாத்திரங்கள் வருகிறார்கள்.

இலங்கை பற்றிய சிவானந்தனின் நாவல் முற்றிலும் இலங்கைத் தமிழர் வாழ்வு பற்றிய, இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களை மட்டுமே பாத்திரமாகக் கொண்ட நாவல். ஈழத் தமிழர் போராட்டத்தையும் அதனது எழுச்சியையும் மீட்சியையும் கதைக்களமாகக் கொண்ட நாவல். சோசலிச அரசியல், இனவாதம், ஜூலைக் கலவரம், வடகிழக்குத் தமிழர் ஆயுதப் போராட்டம், எமது சமூகங்களில் அரசியலிலும் வாழ்விலும் பெண்கள் ஏற்கும் மகத்தான பாத்திரம், அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறை என்பதாக நகரும் நாவல் இது.

இலங்கை குறித்த இந்த இரண்டு நாவல்களும் மேற்கில்தான் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்த நாவல்களினது அணுகுமுறையும் அரசியலும் படைப்பாளிகள் தேர்வும் முற்றிலும் மாறுபடுகிறது. ஓன்டாஜி மேற்கத்திய அடிப்படையிலான மனித உரிமையை வலியுறத்த, சிவானந்தன் சோசலிசத்தையம் இனவிடுதலையையம் இணைத்த விடுதலை அரசியலை முன்வைக்கிறார்.

நான்கு நாவல்களினதும் கதை சொல்லும் முறையையொட்டி, இந்தக் கதைளின் பூர்வீக நாடுகளிலான இந்தியாவிலும் இலங்கையிலும் விவாதங்கள் நடைபெறுகின்றன. இலங்கை வாழ்வையும் இந்திய வாழ்வையும், அதனது நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் இந்த நாவல்கள் சித்தரிக்கின்றனவா? இந்த குறிப்பிட்ட நாவல்கள் இயங்குகிற, சுதந்திரம் பெற்றதன் பின் இந்நாடுகளில் இன்று வரையிலுமுள்ள காலகட்டத்தின் மக்களது வாழ்வையும் கொந்தளிப்பான பிரச்சினைகளையும் இந்த நாவல்கள் பேசுகின்றனவா? அருந்ததியின் நாவலுக்கும் சிவானந்தனின் நாவலுக்கும் சில பொதுத் தன்மைகள் இருக்கின்றன. பங்கஜ் மிஸ்ராவின் நாவலுக்கும் ஒன்டாஜியின் நாவலுக்கும் சில பொதுத் தன்மைகள் இருக்கின்றன. சிவானந்தனின் நாவல் இலங்கை இந்திய சமூகம் பற்றிய, அதனது மக்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றிய எந்த வாசகரையும் நோக்கம் கொண்டு, பதிப்புலகின் தொழில்முறைக் காரணங்களை நோக்கி, மேற்கத்திய வாசகளை முன்வைத்து சந்தைப் படுத்தலுக்காக எழுதப்பட்டது இல்லை. அருந்ததியின் நாவல் மேற்கத்திய பதிப்பகத்தினைச் சென்று சேர்ந்தது யதேச்சையாக நிகழ்கிறது. மேற்கத்திய வாசகனை நாவலின் உள்ளே ஈரப்பதற்கான முஸ்தீபுகள் ஏதும் அவரது நாவலில் இல்லை. சிவானந்தனின் நாவலும் இவ்வாறுதான் இயங்குகிறது. எமது நாடுகளின் வாழ்வையும், எமது மக்களின் பிரச்சினைகளும் குறித்த ஒரு புரிதலை ’பிற’ வாசகனுக்கு வழங்குவதனையே இந்த நாவல்கள் முதன்மைப் பண்பாகக் கொண்டிருக்கின்றன.

பங்கஜ் மிஸ்ராவினதும் ஒன்டாஜியினதும் நாவல்கள் எமது பிரச்சினைகளையும் எமது மக்களின் வாழ்வையும் மேற்கத்திய சிந்தனையின் வழி, அவர்களது பார்வையின் வழி, திறந்து வைப்பதாக உள்ளன. மேற்கத்திய வாசகன் நேரடியிலாக கதைக்களத்தினுள் நுழைவதற்கான ஒரு வழிமுறையாகவும் இந்தவிதமான கதை சொல்லல் இருக்கிறது.

நாவல்களாயினும் திரைப்படமாயினும் கடந்த இருபது ஆண்டுகளில் நேர்ந்திருக்கிற ஒரு மாற்றத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டுதான் இவற்றை அணுகவேண்டும். தகவல் தொழில்நுட்ப கணணி யுகம் தோற்றுவித்த மாற்றத்தடன் இணைந்த உலகவயமாதல்தான் அந்த மாற்றம். இந்த மாற்றத்தினால் மனிதர்களின் இடப்பெயர்வும், நாடுகளுக்கிடையிலான, பண்பாடுகளுக்கு இடையிலான ஊடாட்டமும் அதிகரித்திருக்கிறது. இந்த நிகழ்வுப் போக்கில் தொழில்முறையிலான சந்தைத் தன்மைகளும், சீரிய தன்மைகளும் சமாந்தரமாகவேதான் செயல்படும். இந்த உலகமய ஊடாட்டங்களின், இடப்பெயர்வின், பண்பாட்டுக் கலப்பின் விளைவான இலக்கியங்களையும், திரைப்படங்களையும், எது சந்தைக் கலாச்சாரக் கூறுகளைக் கொண்டது, எது சீரிய பண்பாட்டு அரசியல் கூறுகளைக் கொண்டது எனும் அடிப்படையிலேயே அணுகப்பட வேண்டும். தமிழவனதும் இ.பா.வினதும் போலந்தும்-தமிழகமும் குறித்த நாவல்களும் கூட இந்த அடிப்படையிலேயே அணுகப்பட வேண்டும்.

இரு விதமான அணுகுமுறைகளில் எமது அணுகுமுறையாக, எமது சமூகங்கள் மற்றும் எமது மக்களின் ‘ஆதாரமான’ வாழக்கை மற்றும் சித்தரிக்கப்படும் மாந்தரின் ‘பிரதிநிதித்துவம்’ என்பதான் அடிப்படையையே நாம் தேர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்திய இலக்கியத்தோடு இந்தியப் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களைக் கீழாக மதிப்பிட்ட ஸல்மான் ருஸ்டியின் கூற்று உலக அளவில் ஏற்படுத்திய சரச்சைகள் இன்றும் பொருத்தமுள்ளதுதான்.

இந்தியா குறித்தும் இலங்கை குறித்தும் கடந்த ஐம்பதாண்டு கால வாழ்வும், அரசியலும் பற்றி எழுதப்பட்ட நாவல்கள் குறித்தும், இத்தகைய சரச்சைகள் தவிர்க்க முடியாதன. இலங்கையின் இனப் பிரச்சினையில் அது அத்தீவு மக்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புக்களில், அது பற்றிப் பேசும் ஒண்டாஜியினதும் சிவானந்தனதும் நாவல்களில், பிரச்சினையின் ஆதாரத் தன்மையினையும் பிரதிநிதித்துவத்தினையும் தேர்வதிலிருந்து எந்த வாசகனும் பின்வாங்கி விட முடியாது.

இந்திய-தமிழக வாழ்வு என எடுத்துக் கொண்டாலும் இந்துத்துவம் – சாதியம் – பார்ப்பனிய எதிர்ப்பியக்கம் – கம்யூனிஸம் – பெண்ணொடுக்கமுறை – தமிழ் சமஸ்கிருதப் பண்பாடு – குற்றச் செயலாக அரசியல் போன்றவற்றைக் குறித்த ஆதாரத்தன்மையையும், கதை மாந்தரின் பிரதிநித்துவத்தையும் விலக்கிவிட்டு இந்நாவல்களைப் பார்க்க முடியாது. பங்கஜ் மிஸ்ராவின் நாவலும் சாதியம் பேசுகிறது. அருந்ததியின் நாவலும் பேசுகிறது. இந்துத்துவம் பற்றி மிஸ்ராவின் நாவலும் பேசுகிறது. அருந்ததியின் நாவலும் பேசுகிறது. ஆதாரத்தன்மை மற்றும் பிரதிநிதித்துவம் என்கிற கேள்விகைளை இந்நாவல்களின் மதிப்பீட்டிலும் நாம் தவிர்க்கமுடியாது.

0 comments:

 

Blogroll

Site Info

Text

ஏலாதி Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template

TEMPLATE ERROR: Error during evaluation of all-head-content